உள்நாடு

ஒரு தொகை மஞ்சளுடன் நால்வர் கைது

(UTV|மன்னார்) – சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 807 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மற்றும் நுரைச்சோலை கடற்கரைகளின் ஊடாக சட்டவிரோதமாக குறித்த உலர்ந்த மஞ்சள் தொகையை நாட்டிற்கு கொண்டு வர முற்பட்டபோது கடற்படையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் தொகை, இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சந்தேகநபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சின்னபாடு மற்றும் யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது

Related posts

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

முரல் மீன் குத்தியதில் 29 வயதான மீனவர் உயிரிழப்பு.

நிதி மோசடி வழக்கு : சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை எடுக்க தீர்மானம்