கிசு கிசு

ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்தது

(UTV | கொழும்பு) – இலங்கையில் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மக்கள் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும் என்று சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற போதும், ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.

ஒமிக்ரோன் திரிபானது மிக வேகமாகப் பரவக்கூடியது. எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

மக்கள் முறையாகச் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாவிட்டால், இது பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

பால்மாவுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும்

பசிலும் இராஜினாமா : இடைக்கால அரசில் பசிலுக்கு எந்தப் பதவியும் இல்லையாம்

தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும்