அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நபர் கைது!

பண்டாரகம வேவிட்ட குளத்தை சட்டவிரோதமாக நிரப்பிய சந்தேகத்தின் பேரில் பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவராவார்.

குறித்த குளத்தின் சுமார் 8 மீட்டர் அகலமும் 20 மீட்டர் நீளமும் கொண்ட பகுதியை சந்தேக நபர் நிரப்பியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இது தொடர்பாக விவசாய ஆராய்ச்சி அதிகாரி பண்டாரகம பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைது

கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் கொள்ளையர்கள் அட்டகாசம்!

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில்