சூடான செய்திகள் 1

ஐ.தே.முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று பிற்பகல்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின்பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை பிழையானது என்று உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதை அடுத்து, நேற்று இரவு 7.00 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு எதிரான மேன்முறையீட்டு மனு தொடர்பில், உயர் நீதிமன்றம் எடுக்கவுள்ள தீர்ப்பின் அடிப்படையில் செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

தாமரை கோபுரத்தின் ரூ.02 பில்லியனிற்கு என்ன நடந்தது – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

ஆசிய பௌதீகவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு வியட்னாம் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு நிதி அன்பளிப்பு

காஸாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல்

editor