உலகம்

ஏற்றுமதி செய்யும் பணிகளை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தியது

(UTV | கொழும்பு) – இந்தியாவில் உள்நாட்டில் தடுப்பூசி கேள்வி அதிகரித்துள்ளதால் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தி உள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படும் என இந்தியா உறுதி அளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கைக்கு ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசியில் 500,000 டோஸ்கள் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Related posts

இராஜினாமாவுக்கு முன்னர் சொந்தங்களை விடுவிக்கும் ட்ரம்ப்

சீனா தடுப்பூசியினை இம்ரான் கானும் செலுத்திக் கொண்டார்

காசா உதவிகளை முடக்கியது இஸ்ரேல் – போர் நிறுத்தத்தை நீடிப்பதில் இழுபறி

editor