உள்நாடு

எரிபொருள் மானியம் கோரும் தனியார் பஸ் உரிமையாளர்கள்  சங்கம்

(UTV | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ் நிலை காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தனியார் பஸ் பிரயாணத்தின் போது சுகாதாரத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் குறிப்பாக சமூக இடைவெளி நிச்சயமாகப் பேணப்படும்.

ஆனால் அரசாங்கம் அல்லது அமைச்சர் கூறுவதைப் போன்று பிரயாணங்களைக் குறைப்பது சாத்தியமற்றது. எனவே தான் எமக்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு கோருகின்றோம் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாஸா கட்டாய தகனத்தினை முடிவுக்கு கொண்டு வரவும்

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்து