சூடான செய்திகள் 1

எரிபொருள் நிலையத்திற்கு செலுத்தவேண்டிய தொகை குறித்த கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பளுகஸ்வெவ பகுதியில் எரிபொருள் கொண்டுசென்ற ரயிலுடன் மோதுண்டு 4 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவத்தின்போது ஏற்பட்ட எரிபொருள் கசிவிற்காக, எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய தொகை தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நஷ்டயீட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை

UTVகிராத் போட்டியின் பரிசளிப்பு விழா | UTV Qirat Competition 2023 Prize-giving Ceremony – First Stage

ஐ.தே.க கூட்டணி தொடர்பில் கபீர் ஹாசிம் கருத்து