உள்நாடு

எரிபொருள் நிலையங்களில் நடக்கும் மோதல்களை வீடியோ பதிவு செய்ய பொலிசாருக்கு பணிப்பு

(UTV | கொழும்பு) – எரிபொருள் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு அங்கு இடம்பெறும் மோதல்களை வீடியோ பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மோதல்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையில், உயர் பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கூடுதல் அதிகாரிகளின் உதவியை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காட்சிகளை பயன்படுத்தி குற்றவாளிகளை இனங்கண்டு எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கை இந்திய கப்பல் சேவை – ஆரம்ப திகதியில் மீண்டும் மாற்றம்.

அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி

பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்து!