உள்நாடு

‘எரிபொருள் கப்பல் வரும் திகதியினை எம்மால் உறுதி செய்ய முடியாதுள்ளது’

(UTV | கொழும்பு) – வங்கி நடவடிக்கைகள் மற்றும் விநியோக பிரச்சினைகள் காரணமாக எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வரும் திகதிகளை அறிவிக்க முடியாதுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த எரிபொருள் கப்பல்கள் இலங்கை துறைமுகங்களை வந்தடையும், தரையிறங்குவதற்கு முன்னர் எரிபொருள் விநியோகம் தொடரும், பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் அடுத்த வாரம் முழுவதும் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்

முன்னாள் அமைச்சர் மஹிந்தவின் இல்லம் பாடசாலைக்கு

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்