சூடான செய்திகள் 1

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்

(UTV NEWS) சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தப்ட்டுள்ளது.

சவுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய்கள் இந்த ஆலையில் தான் சுத்திகரிக்கப்படுகின்றது.

இந்த ஆலையான அரம்கோ புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் உள்ளன.

இந்நிலையில், இன்று அதிகாலை அந்த இரு ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related posts

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு-சபாநாயகர்

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைக்கேடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மீளவும் நீடிப்பு

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு