உள்நாடு

ஊழியர்கள் ஓய்வு- 11 ரயில்சேவை ரத்து

(UTV | கொழும்பு) –  ஊழியர்கள் ஓய்வு- 11 ரயில்சேவை ரத்து

நாட்டில் இன்று காலை திட்டமிடப்பட்டிருந்த 11 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக்க அறியமுடிகின்றது. இது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இன்றும் 60க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படலாம் என முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இன்றைய தினம் கணிசமான எண்ணிக்கையிலான ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி சேனவிரத்ன தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 “அகதி” என்ற அவப்பெயருடன் வந்தவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதில், மக்கள் காங்கிரஸ் பெரும்பணி ஆற்றியுள்ளது’ 

அனர்த்த முன்னாயத்தம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி நேரில் ஆய்வு

editor

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம்