அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து கலந்துரையாடல்.

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று, தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அடிப்படை செலவுகள் தவிர ஏனைய செலவுகள் குறித்து திறைசேறி பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த சில வேட்பாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சில வேட்பாளர்கள் இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனால் உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

“சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை”

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் – மக்களின் போராட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தா ஆதரவு

editor

சுகாதார சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்திற்கு தயார்