வகைப்படுத்தப்படாத

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்கள் ஆராயவுள்ளனர்

(UTV|COLOMBO)-எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்றைய தினம் விஷேட கட்சி தலைவர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 5.30 அளவில் இந்த கட்சி தலைவர்கள் சந்திப்பு சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
குறித்த தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் உள்ளுராட்சி வர்த்தமானிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ள நிலையில், தேர்தல் பிற்போகும் நிலை உருவாகியுள்ளது.
இதுதொடர்பிலேயே இன்றையக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

டெல்லியை உலுக்கும் எச்.வன்.என்.வன் வைரஸ்

Low water pressure to affect several areas in Colombo

ஜப்பான் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி