சூடான செய்திகள் 1

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – இறக்குவானை கோரளைகம பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர்(42) கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதன் போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று, டி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 434 கிராம் வெடி மருந்து உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்று(06) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

அவசரமாக கட்சி உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!

சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைப் பேணுவதற்கு பாலமாகச் செயற்பட்ட அலவியின் மறைவு கவலை தருகிறது-ரிஷாட்

எறும்புகளினால் அச்சத்தில் வாழும் மக்கள்!!