உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹகெலே பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கினியாகல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (04) பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதுடைய பரகஹகெலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கினியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எந்தவொரு பலப்பரீட்சைக்கும் நாம் தயார் – ஆகையால், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

இன்று முதல் தொலைபேசி சேவை கட்டண உயர்வு அமுலுக்கு