உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகிறேன்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“கொடூரமான உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு வருடம்.

இன்றைய தினம் இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த, காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அனைவரையும் கவலையுடன் நான் நினைவு கூறுகின்றேன்.

இலங்கையர்களாகிய அனைவரும் காலை 8.45 மணிக்கு விளக்கேற்றி ஒரு நிமிடம் அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துமாறு உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்” என முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலில் உயிர் நீத்தவர்களைநினைவு கூறும் நிகழ்வுகள் நாடு தழுவிய ரீதியில் இனம் மத பேதமின்றி அனைவராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முக்கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரி கைது

editor

பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

editor

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்

editor