அரசியல்உள்நாடு

உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய அந்தச் சலுகையை அவர்கள் மூவரும் இழந்துள்ளனர்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறி உள்ளார்கள்.

Related posts

பல்கலைக்கழக மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கைது!

editor

உரங்களின் விலைகள் குறைப்பு.

எமது வாய்களை மூட வர வேண்டாம் – மின் துண்டிப்பு தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor