உள்நாடு

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வணாத்தமுல்லை கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வதிவிட சான்றிதழை வழங்குவதற்காக நபரொருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெறும் நடவடிக்கையில் தரகராக செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதியொருவரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணை பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

பெலியத்த படுகொலை – வெளிவந்த திடுக்கிடும் தகவல்

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை – அமைச்சர் விஜித ஹேரத்

editor

பட்டங்களுடன் அறிமுகப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் – திலித் ஜயவீர

editor