உள்நாடு

இலங்கையில் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வௌியிட்ட விடயம்

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இலங்கையில் பணவீக்கம் நிலையான நிலையை எட்டுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 2025 புத்தாண்டுக்கான கொள்கை தொடர் வெளியீட்டு விழாவில் இன்று (08) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இலங்கை மத்திய வங்கியின், 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டுக்கான கொள்கைத் தொடர் இன்று காலை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் நடைபெற்றது.

Related posts

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது

உக்ரைனிலிருந்து தொடர்ந்தும் பயணிகள் வருகை