உள்நாடு

இலங்கையில் 10 சதவீதத்தினர் மன நோய்களால் பாதிப்பு

நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்தினர் கடுமையான மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலக மனநல தினத்தை முன்னிட்டு இன்று (08) நடைபெற்ற தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை தற்கொலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதியின் கைகளால் பதக்கங்களைப் பெற்றார்கள்

editor

பல அமைச்சர்களுக்கு புதிய பொறுப்புகள்

போராட்டத்தில் ஈடுபடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!