உள்நாடு

இலங்கையின் முன்னணி இசை கலைஞரான சுனில் பெரேரா உயிரிழந்தார்

(UTV | கொழும்பு) –   இலங்கையின் முன்னணி இசை கலைஞரான சுனில் பெரேரா இன்று தனது 68வது வயதில் காலமானாதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான சுனில் பெரேரா, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், குணமடைந்தார்.

இதனையடுத்து சுனில் பெரேரா, வீடு திரும்பிய நிலையில், சில தினங்களுக்கு பின்னர் மீண்டும் சுகயீனமுற்று ஓரிரு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சுனில் பெரேராவின் நிலைமை கவலைக்கிடமாக மாறியதை அடுத்து, அவர் நேற்றைய தினம் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

Related posts

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல்

editor

இலங்கையர்களுக்கு கொரோனா மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிப்பது இரத்து

மூடப்பட்ட டீன்ஸ் வீதி!