உள்நாடு

இலங்கையின் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் – IMF எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – கடன் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளால் இலங்கையின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.

அன்னிய கையிருப்பு சரிவு மற்றும் எதிர்காலத்தில் நிதித் தேவைகள் அதிகரிப்பதே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடனான ஆலோசனை செயல்முறையின் முடிவில் தனது கண்டுபிடிப்புகளை முன்வைத்த பின்னர் இதை வலியுறுத்துகிறது.

கடன் மேலாண்மை – எதிர்காலத்தில் நுண் நிதி நிலைத்தன்மை மற்றும் வறுமையை எதிர்கொள்ள வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடையத் தொடங்கிய இலங்கையின் பொருளாதாரம் கொவிட் தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

அவர்களின் பரிந்துரைகளில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு முழு அளவிலான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் வலுவான பணவியல் கொள்கையை பின்பற்றுதல் ஆகியவை அடங்கும்.

வெளிநாட்டு கையிருப்பை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் சபை, இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்தல், ஊழலை ஒழித்தல் மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் முறையான முகாமைத்துவத்தைப் பேணுதல் போன்றவற்றை உள்ளடக்கியதாக அதன் பரிந்துரைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Related posts

ஒன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்கள்!

வெற்று ஆவணங்களில் கையொப்பமிடத் தயாராக இல்லை

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு