உள்நாடு

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மாதத்தில், 126,379 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அவர்களில் 37,179 பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,692,902 என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

தாமரைக் கோபுரத்திற்கு சேதம்விளைவித்த நபர்கள் கைது!

கற்குழியில் நீராட சென்ற தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலி.

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சஷீந்திர ராஜபக்க்ஷ