உள்நாடு

இலங்கைக்கு எதிராக ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது

(UTV | கொழும்பு) –  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் இன்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

அத்துடன், ப்ரான்ஸ், ஜேர்மன் நெதர்லாந்து கொரியா யுக்ரைன், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் cள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெறும் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இடம்பெற்ற ஊடாடல் பொது நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் கருத்துவெளியிட்டிருந்தார்.

அதில் இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறியின் கீழ் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல் – 30% குறைவு

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட

சம்பள அதிகரிப்பினை கோரி மீண்டும் களமிறங்கும் ஆசிரியர் சங்கம்