உள்நாடு

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தங்கத்தின் விலை உச்சம் தொட்டது

(UTV | கொழும்பு) – இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை 150,000 ரூபாயைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது.

மேலும், இலங்கை சந்தையில் தங்கத்தின் அளவு வேகமாக குறைந்து வருவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை வைத்திய பரிசோதனைக்கு

பரோட்டா மற்றும் வடை ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்வு

மின் கட்டணம் குறைக்கப்படும் என எவரும் கூறவில்லை – 37% அதிகரிக்க வேண்டும் – மின்சார அமைச்சர் குமார ஜயக்கொடி | வீடியோ

editor