உள்நாடுவணிகம்

இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள்

(UTV|COLOMBO) – கடனாக பணம் வழங்கும் போது ஏற்படும் முறைகேடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு, அதிகூடிய வட்டி அறிவிடல், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் அந்த முறைப்பாட்டில் அடங்குகின்றன.

இதன் காரணமாக இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சுடன் இணைந்து பணத்தை கடனாக வழங்கும் நிறுவனம் மற்றும் ஆட்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கல், அவற்றை ஒழுங்கமைத்தல், கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளுக்காக புதிய சட்டத்தை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பணத்தை கடனாக வழங்கும் போர்வையில் முன்னெடுக்கப்படும் மோசடிகளுக்கு சிக்கி கொள்ளாது அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

பாண் விலை குறைப்பு

editor

இன்று முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!

 தமிழர் தரப்புக்கும் – அரசுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தை கடந்தகாலங்கள் போன்று மாறிவிடக்க்கூடாது