இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா இன்று காலை (24) தனது 78ஆவது வயதில் காலமானார்.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலினி பொன்சேகா 2010 இல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் நுழைந்து 2015 வரை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.