உள்நாடு

இலங்கை குழு ஜெனிவா விஜயம்

(UTV | கொழும்பு) –   ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு இன்று ஜெனிவா பயணமாகவுள்ளது.

இதன்படி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

BREAKING NEWS – முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

editor

உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை – மற்றொரு மாணவனை தேடும் பணி தொடர்கிறது

editor

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு ஜனாதிபதியின் கவனத்திற்கு

editor