உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நாட்டில் நேற்றைய தினம (17) 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,924 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலிருந்து திரும்பிய ஐவரும் பங்களாதேஷிலிருந்து வந்த இருவரும் கடற்படை உறுப்பினர்கள் இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 516 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Related posts

இல்ல விளையாட்டு போட்டியால் உயிரிழந்த வவுனியா முஸ்லிம் பாடசாலை மாணவர்கள்!

பஸ் லலியாவின் சகாக்கள் கைது!

editor

வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள்!