உள்நாடு

இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே

(UTV | கொழும்பு) –   இலங்கை இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கு அமைய, இலங்கை இராணுவ படைகளின் 59 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே இன்று (07) முதல் கடமைகளை முன்னெடுக்கவுள்ளார்.

கஜபா படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, முன்னதாக இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக பதவி வகித்திருந்தார்.

இலங்கை இராணுவப் படைகளின் 58 ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஓய்வு பெற்றதையடுத்து அப்பதவிக்கு மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டார்.

Related posts

ஆதிவாசிகளின் குடும்பங்களின் பிள்ளைகளும் மந்தபோசன நிலைக்கு

பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 ஆம் ஆண்டாகும் போது பசுமை இலக்குகளை அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும்

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர் றிப்தி அலி!