உள்நாடு

இராஜாங்க அமைச்சரை பதவி நீக்குமாறு சஜித் கோரிக்கை

(UTV | கொழும்பு) –   அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் கீழ்த்தரமாகவும் சட்டவிரோதமான முறையிலும் நடந்துகொண்ட இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இராஜாங்க அமைச்சரின் இழிவான நடத்தையை கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், அவருடைய நடத்தை நாட்டில் தற்போது காணப்படும் அராஜக நிலையை எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் இந்த நடத்தை நாட்டின் மனித உரிமைகளின் பின்னடைவு எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

editor

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு