உள்நாடு

இரண்டாவது நாளாக  தொடரும் சத்தியாகிரக போராட்டம்

(UTV|கொழும்பு) – தங்களது வைப்புக்களை மீளப்பெற்றுத்தருமாறு கோரி ஈ.ரி.ஐ வைப்பாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பு நேற்று ஆரம்பித்த சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக ஈ,ரி.ஐ வைப்பாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அனுஸா ஜயந்தி தெரிவித்துள்ளார்.

பொறளையில் உள்ள ஈ.ரி.ஐ நிறுவன தலைமையக கட்டடத்திற்கு முன்பாக இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் கூடாரம் ஒன்றை அமைப்பதற்கு போராட்டகாரர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

Related posts

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் உயிரிழப்பு

கொரோனா – உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம்

இலங்கை பத்திரிகை ஸ்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக செந்தில் வேலவர் நியமனம்!

editor