உள்நாடு

இயற்கையின் கோரம் : 23 வயதுடைய யுவதியின் சடலம் மீட்பு

(UTV | கொழும்பு) – மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயுள்ள நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதையுண்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 23 வயதுடைய யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கேகாலை அல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் குறித்து குறித்த நபருக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு அவரை வீட்டில் இருந்து வௌியேற கூறியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஞாயிறு போராட்டம் : ஒரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு – சதொச

மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி