உள்நாடு

இயக்கச்சி வெடிப்பு சம்பவம் – காயமடைந்த நபர் உயிரிழப்பு

(UTV|கிளிநொச்சி )- கிளிநொச்சி பளை – இயக்கச்சி பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இயக்கச்சி பகுதியை சேர்ந்த 44 வயதுடைவரே உயிரிழந்துள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு ஒன்றை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்தபோது, அது வெடித்தமையினால் காயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

இலங்கை துறைமுக நகர சட்டம் தொடர்ந்தும் சர்ச்சையில் [VIDEO]

நாட்டினை முடக்குமாறு SJB கோரிக்கை