உள்நாடு

இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகாது

(UTV | கொழும்பு) – கடந்த டிசம்பர் 3ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மின்வெட்டுதான் சமீபத்திய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCS) தெரிவிக்கின்றது.

மின் தடை காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“டிசம்பர் 3ஆம் திகதி இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டது. அதற்குக் காரணம், டிசம்பர் 3ஆம் திகதி மின்வெட்டு ஏற்பட்ட போது, ​​இரண்டு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டது. ஒரே நேரத்தில் 600 மெகாவாட் குறைந்துள்ளது. ஒன்று கடந்த வாரம் 3ஆம் திகதி வரை செயல்படாமல் இருந்தது, மேலும் 6 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிட்டுள்ளோம். சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..” என ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, இன்று (08) மின்வெட்டு இன்றி மின்சாரத்தை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சுகபோக வாகன ஏலத்தின் முதற் கட்டம் ஆரம்பம்

editor

பொதுமக்களுக்கான அறிவிப்பு

BREAKING NEWS – இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

editor