சூடான செய்திகள் 1

இன்று(06) ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையே விசேட சந்திப்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று ஜனாதிபதியின் உத்தியோகர்பூர்வ இல்லத்தில் இன்று(06) மாலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தேச அரசியல் கூட்டணி, மாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது உள்ளிட்ட பல முக்கியமான அரசியல் காரணிகள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி இன்று சந்தித்து, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

அனுமதி பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வர் கைது

குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் கொடுத்த கட்டாய அறிவுரை -என்ன?

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு