உள்நாடு

இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டி விலையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இன்று முதல் நாட்டில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கவுள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையில், ப்ரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையினை அதிகரித்தமையினாலேயே குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

இதன் காரணமாகவே இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவாலும், ஏனைய துரித உணவு வகைகளின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளது.

குறித்த பண்டங்களின் விலையை அதிகரிக்க பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

மன்னாரில் கற்றாலைக்கு எதிராக 33ஆவது நாளாக தொடரும் போராட்டம்

editor

காசாவில் யுத்த நிறுத்தத்தை வேண்டி இலங்கை எம்.பிக்கள் – கொழும்பு ஐ.நா தலைமையகத்தில் மகஜர் கையளிப்பு!

“மேர்வினுக்கு தலையில் சுகமில்லை” – மனோ கணேசன் MP