உள்நாடு

இன்று முதல் தொலைபேசி சேவை கட்டண உயர்வு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை உயர்த்துவதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அனைத்து மொபைல், லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்கள் மற்றும் பிற ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளன.

மேலும், கட்டண தொலைக்காட்சி சேவைகளின் கட்டணத்தை இன்று முதல் 25 சதவீதம் உயர்த்தப்போவதாக தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெறுமதி சேர் வரி அல்லது VAT திருத்தத்துடன் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட பட்ஜெட் வாட் வரியை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா, விலை அதிகரிப்பு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு தமது நிறுவனங்களால் சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Related posts

அமைச்சரவையில் இன்று 21வது திருத்தம்

அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி

editor

மக்கள் எதிர்பார்க்கும் இலங்கை நிச்சயம் உருவாக்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor