உள்நாடு

இன்று முதல் தனியார் பேரூந்து சேவைகள் வழமை

(UTV | கொழும்பு) –   இன்று முதல் தனியார் பேரூந்துகள் வழமை போன்று போக்குவரத்தில் ஈடுபடும் என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

தனியார் பேரூந்துகளுக்கு தற்சமயம் எரிபொருள் போதியளவு கிடைக்கின்றது. எனவே எதிர்காலத்தில் எதுவித தடையும் இன்றி தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேரூந்துகளது போக்குவரத்து சேவைகள் 50 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு

COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!

“இலங்கைக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது”