சூடான செய்திகள் 1

இன்று மீண்டும் கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் தெரிவுக்குழு கூடவுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோர் இன்று சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அதிவேக வீதியின் இருமருங்கிலும், மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

UTV செய்திகளுக்கு வாக்களிக்கவும்

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு