உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தம்

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு பிரச்சினைகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி, இந்தச் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அதன்படி, இரவு தபால் ரயில்கள் இன்று (16) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஞ்சன் தொடர்பில் CID பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு வாரத்தில்