வகைப்படுத்தப்படாத

இன்று காலை இடம்பெற்ற பதறவைக்கும் முச்சக்கர வண்டி விபத்து!! ஒருவர் பலி ; 2 சிறுவர்கள் படுகாயம்

(UDHAYAM, COLOMBO) – வவுனியா – ஓமந்தை பகுதியில்இ ன்று காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 2 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி காலை 6.30மணியளவில் வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கும் ஓமந்தை பாடசாலைக்கும் இடையே காணப்படும் பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஓமந்தை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நீராடி கொண்டிருந்த 4 பேர்! 18 வயது இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்

மறுசீரமைக்க உள்ள நேட்ரே டேம்-பிரதமர் இம்மானுவேல் (VIDEO)

கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதை தொடர்ந்து கிழக்கு கூட்டாவுக்கு 40 ஆயிரம் மக்கள் திரும்பினர்