(UTV | கொழும்பு) – வளியின் தரக் குறியீடு (AQI) இன்று (9) உயர் மட்டத்தை அடையும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து இந்நிலை சாதாரணமாகி வருவதாக வளி மாசு முகாமைத்துவ பிரிவின் பிரதம விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் நேற்று (8) 150 முதல் 200 வரை ஆரோக்கியமற்றதாக காணப்பட்டது.
சுவாசம், நுரையீரல் அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
வளியின் தரம் ஆரோக்கியமற்ற அல்லது சிவப்பு வரம்பில் (151-200) குறைந்தால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்வதை குறைத்துகொள்ள வேண்டும்.
( குறிப்பாக சுவாசம் சம்பந்தமான நோய்களில் இருப்பவர்கள் )
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්