அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று அவசரமாக தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி அநுர

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்று (07) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அவசர சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மீண்டும் மின்சாரம் தடைப்படும் சாத்தியம்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க (IMTC) பிரதிநிதிகள் – சிறீதரன் எம்.பியுடன் சந்திப்பு

editor

திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை – ஜனாதிபதி அநுர

editor