உள்நாடு

இன்று 18 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) –  அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்தை கூட்டு நீர் வழங்கல் திட்டத்தில் அவசர பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு அமலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைச்சு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பேருவளை, அளுத்கம, தர்கா டவுன், பெந்தர, களுவாமோதர, பிலிமானவத்தே, பம்புவால, பயகல மற்றும் மாகோனா ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

Related posts

பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஜனாதிபதியின் புதிய செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்