உலகம்

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்பு

(UTV |  இந்தியா) – இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்க உள்ளார்.

64 வயதான அவர் இந்திய வரலாற்றில் பழங்குடி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் ஜனாதிபதியாக கருதப்படுகிறார்.

திரௌபதி முர்மு இன்று இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் இரண்டாவது பெண்மணியும் ஆனார்.

சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து திரௌபதி முர்மு அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

🚨 ஈரான் ஜனாதிபதி மரணம்! ஜனாதிபதியாக முக்பர்

காசிம் சுலைமானி கொல்லப்பட்டமை தொடர்பில் ஐ.எஸ். அமைப்பு அறிக்கை

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளில் வெற்றி – Oxford பல்கலைக்கழகம்