விளையாட்டு

இந்திய கிரிக்கட் அணி விராட் கோலியை நம்பியே செயற்படுகிறது?-குமார் சங்கக்கார

(UTV|COLOMBO)-இந்திய கிரிக்கட் அணி விராட் கோலியை மாத்திரமே நம்பி இருக்கிறது என்ற நிலைப்பாடு நியாயமானது இல்லை என்று, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
விராட் கோலி கடந்த பல வருடங்களாக சிறப்பாக துடுப்பாடி வருகிறார்.
அவரது ஆட்டத்திறன் குறித்து பெருமிதம் கொள்ள முடியும்.
ஆனால் அவரை நம்பியே இந்திய அணி செயற்படுகிறது என்ற நிலைப்பாடு, நியாயமற்றது.
இந்தியாவின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் அதிக திறமைசாலிகளாக இருக்கின்றனர் என்று சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரிய ஸ்டீவன் ஸ்மித்

வரலாற்றில் முதல் தடவையாக; இலக்கங்களுடன் கூடிய ஜேர்சியில் இலங்கை அணி வீரர்கள்(photo)

இலங்கை முதலில் துடுப்பாட்டம்