உலகம்

இத்தாலியில் ஏப்ரல் வரை முடக்கம்

(UTV|இத்தாலி) – இத்தாலியை உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்குவதாக அந்நாடு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என இத்தாலி அறிவித்துள்ளது.

இத்தாலியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 11,591 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கை இத்தாலி அரசு அமுல்படுத்தியது. இந்த ஊரடங்கானது எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதியுடன் நிறைவு பெற உள்ளநிலையில், ஊரடங்கை நீட்டித்து இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

“ரஷ்ய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும்”

தனது சகோதரிக்கு கூடுதல் பொறுப்புகளை பகிர்ந்தளித்த வடகொரிய ஜனாதிபதி

ஹெலி விபத்தில் 5 பொலிசார் உயிரிழப்பு