உள்நாடு

இதோ அமெரிக்கா செல்லும் வாய்ப்பு

(UTV | கொழும்பு) –  2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் இன்று (05) முதல் விண்ணப்பங்களுக்கு திறக்கப்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான “கிரீன் கார்ட்” வீசா திட்டத்துக்கான விண்ணப்பங்களை இன்று இரவு 09.30 மணி முதல் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய “கிரீன் கார்டு” விசா திட்டம் நவம்பர் 8, 2022 அன்று இரவு 10:30 மணி வரை அமுலில் இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

https://dvprogram.state.gov இல் உள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் விண்ணப்பங்கள் கிடைக்கின்றன.

Related posts

எரிபொருள் கோரி நாட்டு மக்களது போராட்டம் உக்கிரகமாகிறது

இலங்கை இந்திய படகு சேவை விரைவில் ஆரம்பம் !

லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்