சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) இன்று மற்றும் நாளைய தினங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் மழை பொழிய கூடும் என்பதுடன் , கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவ மாவட்டத்தில் காலை பொழுது மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மின்னல் தாக்க கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்

பல்லேகல, தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

 51 தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது